Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லையில் கொரோனா பாதிப்புக்குள்ளான முதியவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

ஏப்ரல் 12, 2021 07:57

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிப்பு உயர்ந்து வந்த நிலையில் தற்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தை சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. நேற்று வெளியான முடிவில் முதியவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேரும்படி அவருக்கு மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த அந்த முதியவர் வி‌ஷம் குடித்து அப்பகுதியில் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு இறந்தார்.இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்